Search This Blog

Monday, April 30, 2012

For Sukra dosha


Agneeswarar Temple - For Sukra dosha
 

People who are travelling daily for various purposes often get tired due to hot climatic conditions.Some other people often get tired even they are not working in hot climatic conditions.This is due to deficiency of vitamins especially deficiency in blood.

 


Money is needed for treating any problem and navagraga sukra who is called as venus is the planet responsible for good flow of money.If venus is affected, getting money for essential  things through work or business is affected.This is called sukra dosha.

People who need money which is essential for everything in this world can visit a temple called agneeswarar temple in a place called kanjanur which is situated in kumbakonam to mayiladuthurai route at a distance of 18 kms.This temple is said to be more than 1000 years old.

ref:

வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!


இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!

  1. காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
  2. பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
  3. ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
  4. குளித்தபின் உணவு உண்ணுங்கள்.  பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
  5. பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
  6. வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
  7. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
  8. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
  9. பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
  10. கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
  11. மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
  12. பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி
  13. வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
  14. லுங்கி, கைலி அணியாதீர்கள்.  வறுமை வாட்டும்.  வேஷ்டியே நல்லது.  நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
  15. வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.  இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
  16. புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
  17. அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
  18. மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
  19. குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி--Good photo


ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி:பங்குனி மாத பவுர்ணமி பூஜை





நன்றி:நமது மதுரை வாசகர்.

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?


குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?


நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

Tuesday, April 24, 2012

Story

அன்னதானத்தின் சிறப்பு
அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை  
தெரியப் படுத்தியவர்:  வெ.கோபாலன், தஞ்சாவூர்

(தன்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த கதையை நமக்குச் சுவைபடக் கொடுத்திருக்கிறார் தஞ்சைப் பெரியவர். படித்து மகிழுங்கள்)

    பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

    உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !  வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.

    அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.

    உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.

    இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

    ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.

    அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

    ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

    உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

    ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.

    அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

    "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

    கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.

    குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."

    - சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.

    சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.

    அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "

    சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.

    சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

    இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.

    சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."

    - இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.

    திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."

    நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..."

    முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.

    பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.

Referencehttp://classroom2007.blogspot.in/

Good Article

Quotes

தன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர்  கூறிய வேத வாக்கு.....

Reference:
http://www.livingextra.com/

Saturday, April 21, 2012

Life basic

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்........................

*தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.*

*வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.*

*மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.*

*குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.*

*அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.*

*தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.*

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்


Thursday, April 19, 2012

ayyapa mandhriam


ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்
ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

சரண கீர்த்தனம் பக்த மானஸம்
பரண லோலுபம் நர்த்தனாலஸம்..
அருண பாசுரம்.. பூத நாயகம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
    
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

துரஹ வாகனம்.. சுந்தரானனம்
வரக தாயுதம்.. வேதவர்ணிதம்
குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

த்ரிபுவனார்ச்சிதம்.. தேவதாத்மகம்..
த்ரினயனம் ப்ரபும்..திவ்ய தேசிகம்..
த்ரிதச பூஜிதம்..சிந்திதப்ரதம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

பவபயாபஹம்.. பாவுகாவுஹம்
புவன மோஹனம்.. பூதிபூஷணம்..
தவளவாகனம்.. திவ்யவாரணம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

களம்ரு துஸ்மிதம்.. சுந்தரானனம்..
களப கோமளம்.. காத்ரமோஹனம்..
களப கேசரி.. வாஜிவாஹனம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

ஷ்ருதஜனப்ரியம்.. சிந்திதப்ரதம்..
ஷ்ருதிவிபூஷணம்.. சாதுஜீவனம்..
ஷ்ருதிமனோஹரம்.. கீதலாலஸம்.
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

சுவாமி சரணம் ஐயப்பா..
சுவாமி சரணம் ஐயப்பா..
சுவாமி சரணம் ஐயப்பா..

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்
பிஞ்சாலங்க்ருத மங்களம்
ப்ரணமதாம் சிந்தாமணீ மங்களம்
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்
த்ருஜகாதாமாத்ய பிரபோ மங்களம்
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்
ஷ்ருதிசிரோலங்கார சன் மங்களம்
ஓம் ஓம் ஓம்

Life tricsks

1. நான்கு மணிக்கு எழுந்திருங்கள். ஜபம், தியானம் செய்யுங்கள்.

2. சாத்வீக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வயிறு நிறைய உணவு    எடுத்துக்கொள்ளாதீர்கள்.

3. உங்கள் வருவாயில் பத்தில் ஒரு பங்கினை அல்லது ரூபாய்க்கு பத்து பைசாக்களை தர்மம் செய்யுங்கள்.

4.ஏகாதசி தினம் உபவாசம் இருங்கள் அல்லது பால், பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

5. தினசரி 2 மணி நேரம் மௌனத்தையும், சாப்பிடும்பொழுது மௌனத்தையும் கடைபிடியுங்கள்.

6. இனிமையாக பேசுங்கள்.

7. தேவைகளை குறைத்துக்கொள்ளுங்கள். திருப்தியாக சந்தோசமாக வாழ்க்கையை நடத்துங்கள்.

8. செய்த தவறுகளை சிந்தித்து பாருங்கள்.

9. படுக்கையை விட்டு எழுந்தவுடனும், படுக்கைக்கு செல்லும் முன்னும் கடவுளை தியானியுங்கள்.

10. எளிமையாக வாழ்க்கையும், உயர்ந்த எண்ணமும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும்.


further reference:
pls visit:http://maayaulagam4u.blogspot.in/

Goal

ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்

ஈரெட்டில் கல்லாத கல்வியும்

மூவெட்டில் ஆகாத திருமணமும்

நான்கெட்டில் பிறக்காத பிள்ளையும்

ஐயெட்டில் சேர்க்காத செல்வமும்

ஆறெட்டில் சுற்றாத ஊரும்

ஏழெட்டில் எடுக்காத ஓய்வும்


எட்டெட்டில் ஏற்படாத மரணமும்.

Tuesday, April 17, 2012

குமாரஸ்தவம்


ஓம் ஷண்முக பதயே நமோ நம
ஓம் ஷண்மத பதயே நமோ நம
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
ஓம் ஷட்கோண பதயே நமோ நம
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம
ஓம் நவநிதி பதயே நமோ நம
ஓம் சுபநிதி பதயே நமோ நம
ஓம் நரபதி பதயே நமோ நம
ஓம் சுரபதி பதயே நமோ நம
ஓம் நடச்சிவ பதயே நமோ நம
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
ஓம் கவிராஜ பதயே நமோ நம
ஓம் தவராஜ பதயே நமோ நம
ஓம் இகபர பதயே நமோ நம
ஓம் புகழ்முனி பதயே நமோ நம
ஓம் ஜயஜய பதயே நமோ நம
ஓம் நயநய பதயே நமோ நம
ஓம் மஞ்சுள பதயே நமோ நம
ஓம் குஞ்சரி பதயே நமோ நம
ஓம் வல்லீ பதயே நமோ நம
ஓம் மல்ல பதயே நமோ நம
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
ஓம் இஷ்டி பதயே நமோ நம
ஓம் அபேத பதயே நமோ நம
ஓம் ஸுபோத பதயே நமோ நம
ஓம் வியூஹ பதயே நமோ நம
ஓம் மயூர பதயே நமோ நம
ஓம் பூத பதயே நமோ நம
ஓம் வேத பதயே நமோ நம
ஓம் புராண பதயே நமோ நம
ஓம் பிராண பதயே நமோ நம
ஓம் பக்த பதயே நமோ நம
ஓம் முக்த பதயே நமோ நம
ஓம் அகார பதயே நமோ நம
ஓம் உகார பதயே நமோ நம
ஓம் மகார பதயே நமோ நம
ஓம் விகாச பதயே நமோ நம
ஓம் ஆதி பதயே நமோ நம
ஓம் பூதி பதயே நமோ நம
ஓம் அமரா பதயே நமோ நம
ஓம் குமரா பதயே நமோ நம

நம்ம மதுரைகாரர்


கோவிலுக்கு வருபவர்களுக்கு மயில்தோகை மூலம் சாமரம் வீசும் முதியவர்

படத்தில் இருப்பவர் பெயர் நடராஜன் என்பதாகும்.வயது 82இவர் கோவில்களில் மயிலிறகை வைத்து வந்துள்ள பக்தர்களுக்கு சாமரம் வீசுகிறார்.இவரிடம் பிள்ளையார்பட்டி கோவிலில் முதல் முதல் சாமரக்காத்து வாங்கினேன் பக்தர்களாக பார்த்து பிரியப்பட்டு கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்கிறார்.இவர் 12 வயதில் இருந்து இப்படி சாமரம் வீசி வருகிறார்.ஒரு முறை கோவிலில் விசிறி வைத்து வீசும் ஒரு முதியவர் வராததால் தான் இப்படி ஒரு மயில்தோகை விசிறி தயார்செய்து வீசி வருவதாக கூறுகிறார்.அம்பானி முதல் அத்வானி வரை பல பிரபலங்களுக்கு சாமரம் வீசி அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்காந்தி,நேரு,போன்றவர்களுக்கும் வீசியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவரை அடிக்கடி இவரை பார்க்கலாம்.10 வருடங்கள் மீனாட்சி கோவிலிலேயே வீசியவர்.திங்கள் செவ்வாய்களில் திருப்பரங்குன்றத்திலும், புதன்கிழமை பழனி,
வியாழன் திருச்செந்தூர்,வெள்ளி மற்றும் ஞாயிறு மீனாட்சி அம்மன் கோவில் சனிக்கிழமை திருச்செந்தூர்,அமாவாசையன்று ராமேஸ்வரத்திலும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையிலும் இவர் மயில் சாமரம் வீச வந்து விடுகிறார் என் உயிர் இருக்கும்வரை இந்த வேலையை செய்வேன் கடவுள் கிருபையால் நன்றாக இருக்கிறேன் என்கிறார்.இவரின் தெய்வசேவை போற்றுதலுக்குரியது.இவர் 5 ராமேஸ்வரம் கோவில் கும்பாபிசேகத்தையும்
5 மீனாட்சி கோவில் கும்பாபிசேகத்தையும் பார்த்தாக சொல்கிறார்.இவர் போல மனிதர்களால்தான் கொஞ்சமாவது நல்ல மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.

further reference:

Thursday, April 5, 2012

Panguni Uthiram


Panguni Uthiram, or Paiguni Uttaram, is an important Tamil festival observed in the Tamil month of Panguni (March – April). In 2012, the date of Panguni Uthiram is April 5. Paiguni Uttaram celebrates the wedding of important deities in the Hindu religion. The importance of Panguni Uttiram day is that the Uthiram Nakshatra (star) coincides with the full moon day (Poornima, or Purnima).
Hindu Scriptures like the Puranas and the two epics – Mahabharat and Ramayan – indicate that the auspicious day of Poornima and Uttiram star coinciding in the month of Panguni (March – April) is the day when most divine weddings had taken place.
It is widely believed that Lord Shiva married Goddess Parvathi on this day in this region. Another legend indicates that Lord Muruga married Devasena on Panguni Uthiram day. It is also believed that Lord Rama married Sita on this day.
Another important wedding that took place on Panguni Uthiram is the one between Andal and Sri Ranganatha (Lord Vishnu). This is known as Panguni Uthira Thirukkalyanam and is an important event in Srivilliputtur and neighboring areas.
Panguni Uthiram is the only one day in the year when we see the Goddess Ranganayaki with Srirangam Lord Ranganatha on the same stage. Lord Vishnu and Goddess Ranganayaki meet in the Panguni Uttara mandapam and this is known as the Panguni Uttaram Serththi (togetherness).
Panguni Uttiram is also of great importance in several temples in Tamil Nadu including the Palani Murugan Temple and the Srirangam SriRanganatha Temple. Panguni Uthiram is a 10-festival at the PalaniMurugan Temple and is also the most important festival held here.
Devotees visiting the various Muruga Temples on the Panguni Uthiram day carry the famous Kavadis and several thousand devotees shave their head during the ten-day festival.
Numerous temples in Tamil Nadu observe festivals during this period. The day is also of great importance at the Sabarimala Ayyappa Temple in Kerala. Special pujas and rituals are held on the day.

good interview

திரு.இளங்கோ : அடுத்தடுத்த முயற்சிகள்ல தான். ஒரு செயல் சரியா வரலியா… அதை திரும்ப செய்ங்க. அப்போவும் வரலியா திரும்ப திரும்ப செய்ங்க. அதுக்கப்புறமும் வரலியா திரும்ப திரும்ப திரும்ப செய்ங்க. இப்படி உங்களுக்கு அது சாத்தியமாகுற வரைக்கும் செய்ங்க. இது தான் என்னோட ATTITUDE. சின்ன வயசுல இருந்தே நான் ஒரு திங்கிங் HUMAN BEING. யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா.. அதாவது திட்டிடாங்கன்னா… உக்காந்து யோசிப்பேன். ஏன் இப்படி சொன்னங்க… நாம என்ன தப்பு பண்ணினோம்…நாம ஏன் அழுவனும்? நாம் அழக்கூடாது…. அப்படின்னு யோசிப்பேன். தவிர என்னோட அப்பா அம்மா படிக்காதவங்க என்பது…. எனக்கு மிகப் பெரிய…. (மௌனம்)


quotes

எந்த சிக்கலும் இல்லாம, எந்த பிரச்னையும் இல்லாம சாதிச்சவங்க ரொம்ப ரொம்ப ரேர். காரணம், எல்லாம் சரியா இருக்கும்போது உங்க மூளை மந்தமாயிடும். பிரச்சனைகள் இருக்கும்போது தான் உங்க ப்ரெயின் நல்ல வேலை செய்யும்.